அமைச்சர்கள் தமிழில் பதில்-திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு
இது குறித்து மக்களவை தலைமைச் செயலாளர் ஆச்சாரி கூறுகையில்,
அமைச்சர்கள் மாநில மொழிகளில் பேசுவதற்கு விதிகளில் இடமில்லை. அவை மரபுப்படி உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே பதிலளிக்க வேண்டும்.
உறுப்பினர்களின் கேள்விகள் அதற்கான பதில்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. எனவே அமைச்சர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் மட்டுமே பதிலளிக்க முடியும்.
ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பேச வேண்டும் என்பது அமைச்சர்களுக்கு மட்டும்தான். உறுப்பினர்கள் தங்களது தாய் மொழியில் கேள்விகளை எழுப்பலாம், விவாதங்களில் பேசலாம் என்றார்.
திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் தமிழில் கேள்வி கேட்கவும், பதில் அளிக்கவும் அனுமதிக்கக் கோரி நாடாளுமன்ற செயலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
ஆனால் திமுகவின் இந்தக் கோரிக்கையை செயலகம் மறுத்துள்ளது.
அமைச்சர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தவிர, பிற மாநில மொழிகளில் பேசும் உரிமை வேண்டும் என்றும், உறுப்பினர்களுக்கே இந்த வசதி இருக்கும்போது, அமைச்சர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பைத் தரக் கூடாது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் கேள்வி எழுப்பியது நினைவுகூறத்தக்கது.
ஆங்கிலம், ஹிந்தி தெரியாததால் அமைச்சர் அழகிரியால் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க முடியவில்லை என்றும், அவர் ஓடி ஒளிவதாகவும், இதனால் தமிழில் பேசும் உரிமையை முதல்வர் கருணாநிதி அமைச்சர்களுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கோரியிருதார்.