ஊழியருக்கு பன்றிக் காய்ச்சல் - மறைத்த கோவை மருத்துவமனைக்கு சிக்கல்

Subscribe to Oneindia Tamil

கோவை: தனது மருத்துவமனை ஊழியருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியதை மறைத்த கோவை தனியார் மருத்துவமனை சிக்கலில் மாட்டியுள்ளது.

கோவையில் புகழ் பெற்ற ஜெம் மருத்துவமனையில் வேலை பார்ப்பவர் புனிதா. இவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கம் இருப்பதை சோதனைகள் உறுதி செய்தன. இதனையடுத்து புனிதா வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால் ஊழியர் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அமைதி காத்து வந்தது. தகவலறிந்த மாநகராட்சி , உதவி நகர் நல அலுவலர் சுமதி தலைமையிலான குழுவினர் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனை ஒத்துழைப்பு அளிக்க மறுத்தது.

இந்நிலையில் இன்று 50 அதிகாரிகளுடன் மருத்துவமனைக்கு சென்று சுகாதார துறை மருத்துவக் குழுவினர், மருத்துவமனை நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பாதிக்‌கப்பட்ட பெண்ணின் முகவரி, கடந்த 15 நட்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் முகவரி ஆகியவற்றை பெற்று சென்றனர்.

கிடைத்துள்ள முகவரியை வைத்து சம்பந்தபட்டவர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறி இருக்கிறதா என்பது குறித்து ஆராயவுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+