ஈழத் தமிழர் மறுவாழ்வு-இந்தியா உடனடியாக தலையிட திமுக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Dayanidhi Maran
டெல்லி: ஈழத் தமிழர் மறுவாழ்வு மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளில் இந்தியா உடனடியாக தலையிட்டு தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இந்தக் கோரிக்கையை வைத்தார். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் உடன் இருந்தார்.

இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர்கள் மிகுந்த அவல நிலையில் உள்ளனர். அவர்களை மறு குடியமர்த்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசு தாமததித்து வருகிறது. அவர்களுக்குத் தேவையான நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை இந்தியா தலையிட்டு செய்ய வேண்டும் என்று கருணாநிதி விடுத்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் கோரிக்கையை கேட்டுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், தமிழர்களின் நிலையை மேம்படுத்தவும், அவர்களுக்குத் தேவையானதை செய்யவும் இலங்கை அரசை வற்புறுத்துவதாக உறுதியளித்தார்.

சமீபத்தில்தான் இடம் பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து விவரித்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்குப் பிரதமர் அனுப்பிய பதிலில், தமிழர் நலனில் மத்திய அரசு முழு அக்கறையுடன் உள்ளது. தமிழர்களுக்குத் தேவையான நிவாரணம் கிடைக்கச் செய்வதில் உறுதியாக உள்ளது என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில், தற்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை நேரடியாக பிரதமரை சந்தித்து திமுக தனது கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+