25 பயணிகளை விட்டுவிட்டுப் புறப்பட்ட ஏர்-இந்தியா விமானம்!
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தாவின் நேதாஜி விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று காலை 5.35 மணிக்கு போர்ட் பிளேருக்குப் புறப்பட்டது. இதில் 145 பயணிகள் பயணித்திருக்க வேண்டும். ஆனால் வந்ததோ 120 இருக்கைகள் மட்டுமே கொண்ட விமானம். இதனால் 25 பயணிகள் கொல்கத்தா விமான நிலையத்தில் காத்திருக்க, இந்த விமானம் போர்ட் பிளேருக்கு போயே போய்விட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஆர்ப்பாடத்தில் இறங்க, ஜெட்லைட் விமானம் ஒன்றில் அவர்களில் சிலரை மட்டும் அனுப்பி வைத்தனர். மீதமுள்ள பயணிகள் நாளை புறப்படும் ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
நேற்று மாலையும் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தது. கொல்கத்தா - அகர்த்தலா ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று 10 பயணிகளை விட்டுவிட்டுப் புறப்பட, பின்னர் அடுத்த விமானத்தில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.












Click it and Unblock the Notifications