ஐஓசிக்கு தினசரி நஷ்டம் ரூ.79 கோடியாம்!
டெல்லி: மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு (ஐஓசி) பெட்ரோல், டீசல் விற்பனையால் தினசரி ரூ. 79 கோடி நஷ்டம் ஏற்படுகிறதாம். இத்தகவலை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் காரணமாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனையில் லாபம், நஷ்டம் மாறி மாறி ஏற்படுகிறது.
பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 3.63-ம், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 2.33-ம் நஷ்டம் ஏற்படுவதாக ஐஓசி தெரிவித்துள்ளது.
இது தவிர, எல்பிஜி மற்றும் மண்ணெண்ணெய் விற்பனையாலும் நஷ்டம் ஏற்படுகிறதாம். எல்பிஜி சிலிண்டருக்கு ரூ. 158.55-ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 17.15-ம் நஷ்டம் ஏற்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டில் ஒட்டுமொத்தமாக ஐஓசி-க்கு ரூ. 23,510 கோடி நஷ்டம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐஓசி, பிபிசிஎல், எச்பிசிஎல் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்த நஷ்டம் ரூ. 41,440 கோடியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.