சீன ஊடுறுவலை ஊதிப் பெரிதாக்கும் மீடியா- பிரதமர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சீன ஊடுறுவல் விவகாரம் மிகச் சாதாரணமானது, சிறியது. அதை தேவையில்லாமல் ஊடகங்கள் ஊதி பெரிதாக்கி விட்டன என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பிரதமரின் இல்லத்தில் நேற்று இப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பயப்படும்படியாக ஒன்றும் இல்லை. ஆனால் ஊடகங்கள்தான் இதை தேவையில்லாமல் பெரிதாக்கி விட்டு விட்டன.
இந்தியாவுக்கான சீனத் தூதர் ஸாங் யான்-ஐ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு நல்ல முறையில், சுமூகமாக இருந்தது என்றார் பிரதமர்.












Click it and Unblock the Notifications