செங்கல்பட்டு முகாமில் 40 இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
செங்கல்பட்டு: தங்கள் மீதான வழக்குகளை விரைவாக முடித்து தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நேற்று தொடங்கிய 40 அகதிகளின் உண்ணாவிரதம் இன்று 2வது நாளாக தொடர்ந்தது.
இவர்களில் பலரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீதான விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும் என்று இவர்கள் கோரி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக 20 அகதிகளும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
தங்கள் மீதான வழக்குகளை முடித்து, விடுதலை செய்து பிற முகாம்களில் தங்கியிருக்கம் தங்களது குடும்பத்தினருடன் சேர அனுமதிக்க வேண்டும் என செங்கல்பட்டு சிறப்பு முகாம் அகதிகள் கோரி வருகின்றனர்.
சமீபத்திலும் இதுபோன்ற போராட்டம் நடந்தது. இதையடுத்து சிலரை அரசு விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications