பெரோட் இந்தியா ஊழியர்களே அப்படியே 'அப்சார்ப்' செய்யும் டெல்
சென்னை: அமெரிக்காவைச் சேர்ந்த பெரோட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ள டெல் நிறுவனம், இந்தியாவுக்கு வெளியில் அமையும் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சர்வீஸ் புரொவைடர் நிறுவனமாக உருவெடுக்கவுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் தயாரிப்பு நிறுவனமான பெரோட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு சென்னையில் மிகப் பெரிய உற்பத்திப் பிரிவு உள்ளது.
சென்னை தவிர கோவை, நோய்டா, பெங்களூர் ஆகிய நகரங்களிலும் கிளைகள் உள்ளன.
சென்னை அறுகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்தப் பிரிவில் கிட்டத்தட்ட 3,800 பேர் பணியாற்றுகின்றனர். இந்தியக் கிளைகளில் 8300 பேர் பணியாற்றுகின்றனர். பெரோட் நிறுவனத்தின் உலகளாவிய மொத்த கிளைகளிலும் 23,000 பேர் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கையகப்படுத்தலுக்குப் பின்னர் பெரோட் நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் உள்ள 8300 ஊழியர்களையும் டெல் நிறுவனம் அப்படியே எடுத்துக் கொள்ளுமா3ம்.
இந்தியாவில் உள்ள கிளைகளிலேயே பெரியது சென்னை கிளைதான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications