For Daily Alerts
Just In
சித்துவை காணவில்லை!-போஸ்டர் அடித்த காங்
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தொணடரான பாபி பெகல்வான் கூறுகையில்,
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சித்து, அமிர்தசரஸ் தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை. தேர்தல் முடிந்தவுடன் அவர் தொகுதியை மறந்துவிட்டார்.
அதன் பின்னர் அவரை டிவியில் மட்டுமே பார்க்க முடிகிறது. அவரது கவனம் முழுவதும் டிவி ஷோக்களில் தான் இருக்கிறது என்றார்.
ராஜ்குமார் வெர்கா என்ற காங்கிரஸ் எம்எல்ஏ இவர்களை எல்லாம் ஒரு படி தாண்டி மேலே சென்று போலீசில் சித்துவை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தொகுதி மக்களின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்துவை தொகுதி பக்கம் காணவில்லை என சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். இந்த புகாரின் மீது எப்ஐஆர் பதியுமாறு கேட்டு கொண்டுள்ளேன் என்றார்.
Story first published: Tuesday, September 22, 2009, 17:57 [IST]