திமுக மா.செக்களுக்கு 25 பவுன் தங்க சங்கிலி
சென்னை: இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுகவுக்கு வெற்றி தேடி தந்த மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி தங்கசங்கிலி பரிசளிப்பார் என மத்திய ரசாயன துறை அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கை,
இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி தேடி வரும் மாவட்ட கழக செயலாளர்களுக்கு எனது சொந்தப் பொறுப்பில் தங்க சங்கிலி அணிவிக்கப்படும் என தென் மண்டல அமைப்பு செயலாளர் அழகிரி தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தார்.
இடைத்தேர்தலில் கம்பத்தில் தான் திமுக அதிக வாக்கு வித்தியாச வென்றுள்ளது. இதையடுத்து தேனி மாவட்ட கழக செயலாளர் மூக்கையாவுக்கு 25 பவுன் தங்கச் சங்கிலி வழங்கப்படுகிறது.
அதேபோல் தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளர் என்.பெரியசாமிக்கு (ஸ்ரீவைகுண்டம்) 10 சவரன் தங்க சங்கிலியும், திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளர் ஐ.பெரியசாமிக்கு (கம்பம்)10 சவரன் தங்கச் சங்கிலியும், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் பூண்டி கலைவாணனுக்கு (இளையான்குடி)10 சவரன் தங்கச் சங்கிலியும் வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரத்திலம் வரும் 26ம் தேதி நடக்கவிருக்கும் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவின் போது தலைவர் கருணாநிதியால் இந்த பரிசு அவர்களுக்கு அணிவிக்கப்படும் என அழகிரி தெரிவித்துள்ளார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.