கடல் உள்வாங்கி சேற்றில் சிக்கி இறந்த மீன்கள்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் பகுதியில் திடீரென கடல் உள்வாங்கியதால் ஆயிரக்கணக்கான மீ்ன்கள் கடலோரத்தில் உள்ள சேற்றில் சிக்கி இறந்தன. இந்த மீன்களை மீனவர்கள் அள்ளிச் சென்றனர்.
தூத்துக்குடி பீச்ரோட்டில் உள்ள கடல் பகுதியில் நேற்று காலை கடல்நீர் திடீரென உள்வாங்கியது. நீண்ட தூரத்துக்கு கடல் உள்வாங்கி காணப்பட்டதால் அந்த பகுதி, வற்றிய குளம் போல காட்சி அளித்தது.
பச்சை வயல்வெளி போல காணப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் இல்லாததால் ஏராளமான மீன்கள் சகதியில் சிக்கி கிடந்தன. இதனை கொத்தி பறவைகள் குவிந்தன.
சகதிக்குள் பாம்புகளும், மீன்களும் அதிக அளவில் சிக்கியிருந்தன. இதைத்தொடர்ந்து பொது மக்கள் சகதியில் சிக்கி கிடந்த மீன்களை சேகரித்தனர். ஏராளமான மீன்களை மீனவர்களும் எடுத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications