1 கோடி டாமிப்ளு மாத்திரை தயாரிக்கும் நாட்கோ-அக்டோபரில் கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அடுத்த மாத இறுதியில் சுமார் 1 கோடி டாமிப்ளு மாத்திரைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என ஹைதராபாத்தை சேர்ந்த நாட்கோ பார்மா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மாத்திரையை நேற்று முன்தினம் மாலை நடந்த விழாவில் நாட்கோ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதை நாட்ப்ளு என்ற பெயரில் விற்பனை செய்யவிருக்கிறது.

விழாவின் முடிவில் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பாஸ்கரா நாராயணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

நாட்ப்ளு மருந்துக்கான மொத்த தேவையையும் இந்த மாத இறுதியில் பூர்த்தி செய்யப்படும். அப்போது சுமார் 1 கோடி மாத்திரைகளை தயாரித்து இருப்போம்.

இந்த வார இறுதியில் இது ஆந்திர சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. விரைவில் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும்.

10 மாத்திரைகள் கொண்ட ஒரு ஸ்டிரிப் வெளி சந்தையில் ரூ. 480க்கு கிடைக்கும். அரசுக்கு ரூ. 275க்கு விற்கப்படும். இந்த மருந்தை எங்களிடம் வாங்கி விற்க மெட்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லைசென்ஸ் பெற்றுள்ளன.

மெட்பிளஸ் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 630 கடைகள் இருக்கின்றன. ஹைதராபாத்தில் 25 கடைகள் இருக்கிறது. இவற்றில் இந்த மருந்துகள் கிடைக்கும்.

குழந்தைகளுக்கான மாத்திரை இன்னும் 45 முதல் 60 நாட்களில் கிடைக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+