அணை: தமிழகத்துக்கு உரிமையில்லை-கேரளா
கூடலூர் : மக்களின் பாதுகாப்புக்காக கேரள வனப்பகுதியில் புதிய அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என கேரள நீர்ப்பாசன துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைபெரியாறு அருகே கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதனால் தென் தமிழக மாவட்டங்கள் கடும் வறட்சிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து கேரள நீர் பாசனத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் கேரள வனப்பகுதியாகும். கேரள வனப்பகுதியில் மக்களின் பாதுகாப்புக்காக புதிய அணை கட்டுவது கேரள அரசின் தனிப்பட்ட உரிமையாகும்.
இதனை தடுப்பதற்கு தமிழக அரசுக்கோ, தமிழக மக்களுக்கோ எவ்வித உரிமையும் இல்லை. தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை நாங்கள் ஒருபோதும் மறுக்க போவதில்லை என்றார்.