உள்ளாட்சி தேர்தல்: 1 வார்டில் போட்டியிட ஆளில்லை-9 பேர் போட்டியின்றி தேர்வு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஒரு வார்டில் போட்டியிட யாருமே விண்ணப்பிக்கவில்லை. மேலும் 9 இடங்களில் தலா ஒருவர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த மாதம் 7ம் தேதி 23 உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத் தேர்தல் நடக்கிறது. ஆனால், இங்கு வேட்புமனு தாக்கல் மிகவும் மந்தமாக இருக்கிறது. இதுவரை 46 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில் 9 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகின்றனர்.
மூலக்கரை 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு யாருமே போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து மீதமுள்ள 13 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற இருக்கிறது.












Click it and Unblock the Notifications