முல்லை பெரியாறு கோப்பில் தவறு: செய்தது யார்?

புதிய அணை கட்ட வனப் பகுதிகளை கையகப்படுத்த மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி கட்டாயம்.
இதுபோன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது, சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் மத்திய அரசு விளக்கம் கோரும். மேலும் இத் திட்டம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் ஏதும் நிலுவையில் உள்ளதா என்பதையும் மத்திய அரசு கேட்கும்.
முல்லைப் பெரியாறு விஷயத்திலும் இது போன்ற கேள்வியை மததிய அரசு கேட்டது. ஆனால், அதற்கு மத்திய வனத்துறை அதிகாரிகள் அளித்த பதிலில் வழக்குகள் ஏதும் என்று குறிப்பு எழுதப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்தே, முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த தவறான குறிப்பு வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் எழுதப்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதன் பின்னணியில் டெல்லியில் உள்ள பலம் வாய்ந்த கேரள 'லாபி' இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
எதையும் நேரடியாகச் செய்யாமல் மறைமுகமாக முதுகில் குத்துவதில் இந்த 'லாபிக்கு' நிகர் ஏதுமில்லை.
இதில் இன்னொரு விவகாரமும் உள்ளது. கேரளத்துக்கு மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் எழுத்துப்பூர்வமாக அனுமதி தரவில்லை. தொலைபேசி வாயிலாகத்தான் அனுமதி தந்ததாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
இதனால் கேரள லாபியின் கைவரிசை இருக்கலாம் என்ற சந்தேகம் மேலும் வலுப்படுகிறு.
சமீபத்தில் தேசிய வனவிலங்கு வாரியம் நடத்திய கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக வழக்கு எதுவும் இல்லை என்ற பொய்யான தகவல் இடம்பெற்றிருப்பதை தமிழக அதிகாரிகள் தான் கண்டுபிடித்து முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்தனர்.
இதையடுத்தே ஜெய்ராம் ரமேஷுக்கு முதல்வர் கடுமையான கடிதம் எழுதியுள்ளார்.
இந் நிலையில் தவறான தகவல்கள் அடங்கியுள்ள தேசிய வனவிலங்கு வாரிய கூட்டத்தின் நடவடிக்கை குறிப்பையும் வெளியிட மாட்டோம் என்றும் தமிழகத்திடம் ஜெயராம் ரமேஷ் உறுதியளித்துள்ளார்.
நீர் விஷயத்தில் கர்நாடகமாவது தமிழகத்துடன் நேரடியாக மோதல் போக்கை கையாள்கிறது. ஆனால், உணவக்கு தமிழகத்தை சார்ந்து வாழும் கேரளம் நேரடியாக அல்லாமல் முதுகில் குத்தும் போக்கை கையாண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications