For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பன் வேட்டை-முதல்வரை சந்திக்கும் பாதிக்கப்பட்ட பழங்குடியினர்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு: சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்டக் குழு கூட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் தமிழகம் மற்றும் கர்நாடக அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல் குறித்து நீதிபதி சதாசிவம் கமிஷன் விசாரித்து, இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களில் 89 பேருக்கு மட்டும் தமிழக, கர்நாடகா அரசுகள் நிவாரணம் வழங்கியதாவும் மற்றவர்களுக்கு வங்கவில்லை என்று கூறப்டுகின்றது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட ஈரோடு, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள் தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க முடிவு செய்யப்ட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X