பெண் பி.ஏ.வுடன் அழகிப் போட்டியை ரசித்த கருணா!
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: கொழும்பில் நடந்த அழகிப் போட்டியை அந்த நாட்டு அமைச்சராக உள்ள கருணா, தனது பெண் பி.ஏவுடன் அமர்ந்து ரசித்த காட்சி படமாக வெளியாகியுள்ளது.
மேலும் போட்டியில் கலந்து கொண்ட ஒரு அழகியுடன் ஜோடியாக கருணா போஸும் கொடுத்துள்ளார்.
இலங்கையில் போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு கூறியது. ஆனாலும், கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் முடக்கி வைத்துள்ளது. அவர்களுக்கு உரிய அடிப்படை சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், மருந்து என எந்த நிவாரணமும் முறையாக தரப்படுவதில்லை.
மிக மிக மோசமான அவல நிலையில் அவர்கள் தவித்து வருவதாக பல்வேறு மனிதாபிமான அமைப்புளும் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கொழும்பில் நடந்த அழகிப் போட்டி ஒன்றை பார்த்து ரசித்துள்ளார் கருணா. அவருடன், அவருடைய பெண் உதவியாளரும் ஜோடியாக சேர்ந்து சென்றார்.
மேலும், அழகிப் போட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண்ணுடன் போஸும் கொடுத்துள்ளார் கருணா.
இந்தப் புகைப்படங்களை ஈழத் தமிழர் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது.













Click it and Unblock the Notifications