For Daily Alerts
Just In
மெரீனாவில் அழுகிய நிலையில் 2 பெண்கள் பிணம்
சென்னை: மெரீனா கடற்கரை பகுதியில் இருவேறு இடங்களில் இரு பெண்களின் சடலங்கள் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
அண்ணாசதுக்கம் அருகே கூவம் நதியின் கழிமுக பகுதியில் ஒரு பெண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அந்த பிணத்தை கைப்பற்றி, சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த பெண்ணின் வயது நாற்பது இருக்கலாம்.
மற்றொரு பெண்ணின் பிணம் கூவம் கழிமுகத்தின் மறுபுறத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது இரு பாறைகளுக்கு இடையே சிக்கிய நிலையில் கிடந்தது. இதையடுத்து போலீஸார் கடும் சிரமத்துக்கு பின் அதை கோட்டை போலீஸார் மீட்டனர்.
அந்த பெண்ணுக்கு 50 வயதுக்கும் குறைவாக இருக்கும். பிணம் அதிகம் அழுகிவிட்டதால், முகம் அடையாளம் தெரியவில்லை.
Comments
Story first published: Wednesday, September 30, 2009, 15:53 [IST]