லஞ்சம்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட்
மதுரை: லஞ்ச வழக்கில் சிக்கிய இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து மதுரை போலீஸ் கமிஷனர் நந்தபாலன் உத்ரவிட்டுள்ளார்.
மதுரை எஸ்எஸ் காலனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அதி வீரராமபாண்டியன். கடந்த ஆண்டு அவர் குற்றவாளி ஒருவரை வழக்கில் இருந்து விடுவிக்க, ஏட்டு கண்ணன் என்பவர் மூலம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் கூறியதால் தான் லஞ்சம் வாங்கியதாக ஏட்டு வாக்குமூலத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து லஞ்சம் வாங்கிய வழக்கில் முதல் குற்றவாளியாக அதிவீரராமபாண்டியன் வழக்கில் சேர்க்கப்பட்டார். இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேற்று கமிஷனர் நந்தபாலனுக்கு லஞ்சஒழிப்புத்துறை போலீசார் பரிந்துரை செய்தனர்.
இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மற்றொரு சம்பவத்தில் மீனாட்சி அம்மன் கோயில் போலீஸ் ஸ்டேஷன் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்த செல்வம் மீது திண்டுக்கல் அருகே உள்ள சாணர்பட்டியில் நில விவகாரத்தில் தகராறு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அவரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக கமிஷனர் நந்தபாலன் உத்தரவிட்டுள்ளார்.