சென்னை வழியாக வளைகுடாவுக்கு செல்லும் 'பார்' பெண்களைப் பிடிக்க கிடுக்கிப்பிடி
சென்னை: துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் டான்ஸ் ஆடவும், பார்களில் பணியாற்றவும் சென்னை வழியாக இளம் பெண்கள் அனுப்பப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பையிலிருந்து பெருமளவில் இளம் பெண்கள் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். அங்குள்ள பார்களில் பணியாற்றவும், நடனமாடவும் இவர்கள் அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இப்படி அழைத்துச் செல்லப்படும் பெண்களில் பலர் மைனர் வயதுடையவர்கள் என்றும் ஆனால் போலியான ஆவணங்கள் மூலம் வயதைக் கூடுதலாக காட்டி இவர்களை ஏஜென்டுகள் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இவர்கள் மும்பை வழியாக துபாய் உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளுக்கு பெருமளவில் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது அங்கு கெடுபிடிகள் அதிகரித்து விட்டதால் பெங்களூர், சென்னை உள்ளிட்ட பிற நகரங்கள் வழியாக அனுப்பப்பட்டு வந்தனர்.
ஆனால் சென்னை வழியாக இதுபோல இளம் பெண்களை சட்டவிரோதமாக அனுப்புவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 500 பேர் இவ்வாறு செல்ல முயன்று பிடிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை யாரும் சிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை வழியாக கிட்டத்தட்ட 30 ஆயிரம் பெண்கள் இதுபோல மோசடியான முறையில் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் கெடுபிடி அதிகரித்துள்ளதால் இளம் பெண்கள் தற்போது டெல்லி பக்கம் தங்களது போக்குவரத்தைத் திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications