பள்ளியில் விஷமருந்தி மாணவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கடையம் அருகே விஷம் குடித்து பிளஸ்டூ மாணவி மயங்கி விழுந்து இறந்தார்.

நெல்லை மாவட்டம் கடையம் அருகேயுள்ள ராவணசமுத்திரத்தை அடுத்த ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மகள் சபீதா லெட்சுமி. இவர் கடையத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டு படித்து வந்தார்.

கணக்கு பாடத்தில் மிகவும் குறைந்த மார்க் எடுத்துள்ளதால் பெற்றோர் சத்தம் போட்டு திட்டியுள்ளனர். இதில் மனம் உடைந்த சபீதா லெட்சுமி நேற்று பள்ளிகூடம் புறப்படும் போது வீட்டுக்கு தெரியாமல் விஷம் குடித்தார்.

அப்படியே பள்ளி கூடம் வந்த அவர் வகுப்பறையில் மயங்கி விழுந்தார். உடனடியாக ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவள் பரிதாபமாக இறந்தார்.

மற்றொரு மாணவர் சாவு..

கடையம் அருகேயுள்ள புலவனூரை அடுத்த பொன்மலர் நகரை சேர்ந்தவர் பட்டமுத்து. இவரது மகன் பாலமுருகன்.

பள்ளி கூடத்துக்கு ஒழுங்காக செல்லாமல் இருந்தார். இதனால் வீட்டில் சத்தம் போட்டுள்ளனர். இதில் மனம் உடைந்த பாலமுருகன் விஷம் குடித்தார். அவரை பாளை ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இன்று காலை அவர் இறந்தார்.

இந்த சம்பவங்கள் குறித்து கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+