For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிகாரில் நக்ஸல்கள் வெறியாட்டம்-16 பேர் பலி

Google Oneindia Tamil News

பாட்னா: பிகாரில் நேற்றிரவு மாவோயிஸ்டுகள் நடத்திய வெறித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்ளிட்ட 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ககாரியா மாவட்டத்தில் உள்ள அமோசிபரேன் தியாரா என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்தது.

துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இந்த கிராமத்தில் புகுந்த சுமார் 100 மாவோயிஸ்டுகள் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டனர்.

இதில் 5 குழந்தைகள் உள்ளிட்ட 16 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

சர்ச்சைக்குரிய நில விவகாரமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று தெரிகிறது.

கிராமத்தினரிடமிருந்து இந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில் மாவோயிஸ்டுகள் இத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பலியான அனைவரும் அம்டைசருவா என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர் அந்த சர்ச்சைக்குரிய நிலத்தில் வேலை பார்க்க வந்த விவசாயிகள் ஆவர். சம்பவம் நடந்த இடத்தில் கூடாரங்கள் அமைத்து இவர்கள் தங்கியிருந்போது இத் தாக்குதல் நடந்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X