Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேவையற்ற வெளிநாட்டுப் பயணம் கூடாது-கருணாநிதி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Tamil Nadu Govt Logo
சென்னை: வெளிநாட்டுப் பயணங்களில் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசின் அணுகுமுறையைப் பின்பற்றுமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பான கடிதம் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி மூலம் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களை தவி்ர்க்குமாறும், பெரிய குழுவை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும், விமானங்களில் சாதாரண வகுப்பில் பயணிக்குமாறும், தனி விமானங்களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்குமாறும் மத்திய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் உத்தரவிட்டுள்ளனர்.

இந் நிலையில், தமிழகத்திலும் இதுபோன்ற சிக்கன நடவடிக்கையை கையாள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர்கள், அரசுத் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு அவர் அனுப்பியுள்ள உத்தரவி்ல், மத்திய அரசினைப் பின்பற்றி கூடுமான வரையில் வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்தலாம். தங்களது வெளிநாட்டுப் பயணத் திட்டத்தை வகுக்கும் முன் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+