காந்தி வழியில் யுஎஸ் பயணிக்கிறது-ஒபாமா
வாஷிங்டன்: தற்போதைய அமெரிக்காவில் காந்திய சிந்தனைகள் ஆழ்ந்துள்ள. அவரது வழியில் அமெரிக்கா பயணிக்கிறது என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
காந்தியடிகளின் பிறந்தநாளான இன்றைய தினத்தை உலகம் வன்முறை எதிர்ப்பு தினமாக கடைபிடித்து வருகிறது. இந்நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
காந்தியின் சிந்தனைங்களும், தத்துவங்களும் மார்டின் லூதர் கிங் ஜூனியரால் பின்பற்றப்பட்டது. மார்டின் லூதர் கிங் தனது 1959ம் ஆண்டு இந்திய பயணத்தின் போது அங்கிருந்து அஹிம்சையை அமெரிக்காவுக்கு கொண்டு வந்தார்.
காந்தியின் மீது அமெரிக்கர்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அவர் அமைதியான இந்திய சமுதாயம் அமைய அஹிம்சையை பயன்படுத்தினார்.
அமெரிக்க மக்களின் சார்பில் அவரது வாழ்க்கையை ஒரு நல்ல பாடமாக நான் ஏற்று கொள்கிறேன். அவருடைய அஹிம்சை தத்துவங்களை பரப்ப இதுவொரு நல்ல பொழுதாக இருக்கும் என நினைக்கிறேன். உலகம் முழுவதும் உள்ள மக்களை அவரது கொள்கைகள் எழுச்சியடைய செய்துள்ளது. அது தொடர வேண்டும்.
அந்த நல்ல உள்ளத்தின் பிறந்தநாளை இந்திய மக்களுடன் சேர்ந்து நாங்களும் கொண்டாடுகிறோம். நீதிக்காக அமைதியான முறையில் தன்னையே அர்ப்பணித்த அவர் மாபெரும் மாற்றத்தை உருவாக்கினார். மனித உரிமைகளை காக்க நாமும் அவரது கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications