போபர்ஸ் வழக்கிலிருந்து குவாத்ரோச்சி பெயரை நீக்கக் கோரி சிபிஐ மனு
டெல்லி: ரூ. 64 கோடி போபர்ஸ் பீரங்கி ஊழல் பேரம் தொடர்பான வழக்கிலிருந்து இத்தாலி தொழிலதிபர் குவாத்ரோச்சியின் பெயரை நீக்கி விடக் கோரி சிபிஐ சார்பில் இன்று டெல்லி கோர்ட்டில், முறைப்படி மனு செய்யப்பட்டது
இத்தாலிய தொழிலதிபரான குவாத்ரோச்சி, போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் ரூ. 64 கோடி கமிஷன் அடித்து விட்டார் என்பது குற்றச்சாட்டு. ஆனால் குவாத்ரோச்சியை விசாரணைக்காக இந்தியா கொண்டு வர சிபிஐ 'கடுமையாக' முயன்றும் அது முடியவில்லை.
இந்த நிலையில் வழக்கை மூடி விடுவது என சிபிஐ முடிவு செய்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், குவாத்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டு வர கடுமையாக முயன்றும் அதில் தோல்வி அடைந்து விட்டோம். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே இழுத்துக் கொண்டு போவது. குவாத்ரோச்சிக்கு எதிரான ஆதாரமும் கிடைக்கவில்லை. எனவே இந்த வழக்கை மூடி விடுவது என்ற முடிவு சரியானதே என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சிபிஐ சார்பில், டெல்லி தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் காவேரி பவேஜா முன்னிலையில் சிஆர்பிசி 321வது பிரிவின் கீழ் சிபிஐ மனு ஒன்றைத் தாக்கல் செய்ததது.
அதில், போபர்ஸ் பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குவாத்ரோச்சியை விசாரணைக்காக கடந்த 19 வருடங்களாக இந்தியா கொண்டு வர முயற்சிகள் செய்யப்பட்டன. ஆனால் அவற்றுக்குப் பலன் கிடைக்கவில்லை.
எனவே குவாத்ரோச்சியின் பெயரை வழக்கிலிருந்து நீக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும். அதன் பின்னர் குவாத்ரோச்சியின் பெயரை நீக்குவது குறித்து கோர்ட் முடிவு செய்யும்.
போபர்ஸ் ஊழல் வழக்கை மூடக் கோரி சிபிஐ மனுத் தாக்கல் செய்யவில்லை. மாறாக ஒருவரது பெயரை மட்டுமே நீக்க அது மனு தாக்கல் செய்வதாக முன்னதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.பி. மல்ஹோத்ரா விளக்கியிருந்தார்.
1987ம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ராணுவத்தி்ற்கு போபர்ஸ் பீரங்கிகள் வாங்கப்பட்டன. இதில் புரோக்கராக செயல்பட்ட குவாத்ரோச்சி ரூ. 64 கோடி பணத்தை கமிஷனாக பெற்றார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அன்று முதல் இந்த வழக்கு தொடர்ந்து இழுபறியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக!












Click it and Unblock the Notifications