For Daily Alerts
Just In
அக்டோபர் 4ல் கூடுகிறது பாமக செயற்குழு
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அக்டோபர் 4ம் தேதி டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறுகிறது.
இதுகுறித்து பாமக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தைலாபுரம் தோட்டத்தில் வரும் 4ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் செயற்குழுக் கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ தலைமை தாங்குகிறார்.
பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப் பினர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள் இச்செயற்குழுவில் பங்கேற்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Saturday, October 3, 2009, 13:35 [IST]