ஏர் இந்தியா பைலட்டுகள் மீது தாக்குதலுக்குள்ளான ஏர் ஹோஸ்டர் மகளி்ர் ஆணையத்தில் புகார்
டெல்லி: நடு வானில், ஓடும் விமானத்தில் இரு பைலட்டுகள் தன்னைத் தாக்கியது தொடர்பாக ஏர் இந்தியா ஏர் ஹோஸ்டஸ் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்றை மகளிர் ஆணையம் நியமித்துள்ளது.
ஷார்ஜாவிலிருந்து லக்னோ வழியாக டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தின் இரு பைலட்டுகளுக்கும், ஒரு ஏர் ஹோஸ்டஸ் மற்றும் விமானத்தின் பர்ஸார் ஆகியோருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 30 ஆயிரம் அடி உயரத்தில் பாகிஸ்தான் மீது விமானம் பறந்து கொண்டிருந்தபோது நடந்த இந்த அடிதடி சண்டையால் கிட்டத்தட்ட 106 பயணிகளின் பாதுகாப்பும் பெரும் கேள்விக்குறியானது.
இந்த தாக்குதலில் ஏர் ஹோஸ்டஸ் காயமடைந்தார். டெல்லி வந்து சேர்ந்ததும் அவர் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த நிலையில் தற்போது தேசிய மகளிர் ஆணையத்திலும் அவர் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க தனிக் குழு ஒன்றை மகளிர் ஆணையம் அமைத்துள்ளது.












Click it and Unblock the Notifications