இனி தாய் மொழியில் ரயில்வே தேர்வு-மம்தா
சிலிகுரி: இனி ரயில்வே தேர்வுகளை அவரவர் தாய்மொழியிலேயே எழுதலாம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
ரயில்வே தேர்வுகளை இது வரை ஆங்கிலம் மற்றும் இந்தியில்தான் எழுத முடியும் என்ற நிலை. இதனால் ஜார்கண்ட், உத்தர்கண்ட், பீகார் மற்றும் கிழக்கு மாநில மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தமிழகம் போன்ற மாநிலங்களிலும் கிராமப்புற மாணவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அதிகளவில் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் சிலிகுரியில் புதிய ரயில் சேவையைத் திங்கள்கிழமை தொடங்கிவைத்த மம்தா பானர்ஜி இனி அவரவர் தாய் மொழியிலேயே ரயில்வே தேர்வுகளை எழுதலாம் என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:
சிலிகுரியில் ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்ஆர்பி) மையம் சில மாதங்களில் செயல்படத் தொடங்கும். இது நாட்டின் 21-வது மையமாகும்.
தாய் மொழியில் வேலை வாய்ப்புக்கான தேர்வுகளை எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்த வருகிறது. அதில் உள்ள நியாயம் புரிகிறது. இனி அவரவர் தாய்மொழியிலேயே ரயில்வே தேர்வுகளை எழுதலாம். இந்த ஆண்டு முதலே தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள், என்றார்.












Click it and Unblock the Notifications