மூத்த பாஜக தலைவர் கன்டெல்வால் மரணம்
டெல்லி: பாஜக முன்னாள் துணைத் தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான பியாரிலால் கன்டெல்வால் இன்று காலை நெஞ்சு வலி காரணமாக மரமணடைந்தார். அவருக்கு வயது 81.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அவர் நேற்று இரவு நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார்.
தனது 16வது வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரச்சார பீரங்கியாக அரசியல் வாழ்க்கையை துவக்கிய அவர் பாஜகவின் துணைத் தலைவராகவும் சில காலம் இருந்துள்ளார். மத்திய பிரதேசம் ராஜ்கார் தொகுதியில் அம்மாநில முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங்கை நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடித்த பெருமை கொண்டவர்.
தற்போது அவரது உடல் டெல்லி பாஜக அலுவலகத்தில் தொண்டர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்குகள் போபாலில் நடக்கவிருக்கிறது.
அத்வானியின் விமர்சகரான கன்டெல்வால் கட்சியின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார். கடைசியாக அவர் ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட்டது தவறு. அவரை மீண்டும் பாஜகவுக்கு கொண்டு வர வேண்டும் என பாஜக மேலிடத்துக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.