71 புதிய சிபிஐ நீதிமன்றங்கள்-தமிழகத்தில் மூன்று!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் 71 புதிய சிபிஐ நீதிமன்றங்களும், தமிழகத்தில் மூன்றும் அமைக்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது.

இது குறித்து சிபிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

மத்திய அரசின் ஒப்புதலுடன், சிபிஐ 12 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது. இவற்றில் சில வழக்குகள் 33 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மேலும், 21 வழக்குகளை வாபஸ் பெற மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

கிரிமினல் வழக்குகளை பைசல் செய்வதற்கான புதிய ஷரத் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்பின் கீழ் வழக்கை பைசல் செய்து கொள்ளலாம்.

ஆண்டுதோறும் சிபிஐ தொடர்பான வழக்குகள் அதிகரித்து வருகின்றன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வசதியாக மத்திய அரசு நாடு முழுவதும் கூடுதலாக 71 சிறப்பு சிபிஐ நீதிமன்றங்களை அமைக்கவுள்ளது. அவற்றில் தமிழகத்தில் மூன்று அமைக்கப்படும்.

இவை மாதிரி நீதிமன்றமாக செயல்பட்டு நாள்தோறும் விசாரணை நடத்தி தீர்ப்பு வங்கும். நீதிமன்றங்களை அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி, மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது என்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+