பாமக பிரமுகரை துப்பாக்கியால் மிரட்டிய 2 போலீஸார் கைது
சென்னை: குடித்துவிட்டு பாமக பிரமுகரை மிரட்டியை போலீஸார் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை முத்தையால்பேட்டை வைக்கப்பட்டிருக்கும் கலர் டிவிக்களை பாதுகாக்கும் பணியில் பெரியசாமி என்ற ஆயுதப்படை போலீஸ்காரர் ஈடுபட்டிருந்தார். அவருடன் சமீபத்தில் சஸ்பெண்ட் ஆன பாண்டியன் என்ற போலீஸ்காரர் இருந்தார்.
அப்போது பாமக பிரமுகர் சரவணன் என்பவர் பள்ளியில் நிறுத்தி வைத்திருந்த தனது பைக்கை எடுக்க வந்துள்ளார். அவரிடம் போலீஸ்காரர்கள் இருவரும் குடிபோதையில் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து பாமக பிரமுகர் சரவணன், முத்தையால்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
அவர் தனது புகாரில்,
போலீஸ்காரர்கள் பெரியசாமி, பாண்டியன் இருவரும் நல்ல குடிபோதையில் இருந்தனர். துப்பாக்கியை காட்டி என்னை மிரட்டினார்கள் என்றார்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் அவர்கள் இருவரையும் விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications