லைசென்ஸ் சஸ்பெண்டை ரத்து செய்ய அரசு டிரைவர்கள் கோரிக்கை
கரூர்: விபத்தின் போது தமிழக அரசு போக்குவரத்து டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ஆறு மாதத்திற்கு சஸ்பென்ட் செய்யப்படுகிறது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசுக்கு சொந்தமான போக்குவரத்து கழகத்தில் பல ஆயிரம் பேர் ஓட்டுனர்களாக பணியாற்றி வருகின்றனர்.
விபத்து ஏற்படும் போது இவர்களின் ஓட்டுனர் உரிமம் ஆறு மாத காலத்திற்கு சஸ்பென்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் உண்ணாவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கரூரில் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு போக்குவரதுத்து ஓட்டுனர்கள் சங்க மாநில செயலாளர் ஷாஜகான் தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது ஷாஜகான் கூறுகையில்,
அரசு வேலை கிடைப்பதையே நாங்கள் பெருமையாக நினைக்கின்றோம். அப்படி இருக்கும் போது போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் வேண்டும் என்றே விபத்தை ஏற்படுத்தி தேவையற்ற பிரச்சனையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள்.
விபத்து என்பது தற்செயலாக ஏற்படுவதாகும். அவ்வாறு விபத்து ஏற்படும் காலகட்டத்தில் விசாரணை முடிவை பொறுத்தே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதி மன்றம் அறிவுறித்தியுள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவை அரசு பின்பற்ற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications