தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலி
எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே கழிவு நீரை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் பலியானார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சித்தலங்கரை பகுதியில் ஒரு பெட்ரோல் பல்க் உள்ளது. அதன் அருகே ராதாகிருஷ்ணன் என்பவர் ஹோட்டல் மற்றும் கட்டண கழிப்பிடம் நடத்தி வருகிறார்.
அங்கிருக்கும் கழிவு நீரை அகற்றுவதற்காக அவர் சிவகாசியை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான சுத்திகரிப்பு வாகனத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதில் சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் சக்திவேல், திருச்சி சன்னதி தெரு உதயன் ஆகியோர் வந்து கழிவு நீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென விஷவாயு தாக்கி இருவரும் கழிவு நீர் தொட்டிக்குள் மயங்கி விழுந்து இறந்தனர். இது குறித்து கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவர்களது உடலை மீட்டனர்.
இருவரது உடலையும் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications