மின்கசிவு காரணமாக தலைமை செயலகத்தில் தீ-பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமை செயலகத்தில் மின்கசிவு காரணமாக நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதை அடுத்து பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.

சென்னை தமிழக அரசின் தலைமை செயலகத்தில் விஐபிக்கள் செல்லும் லிப்ட பகுதிக்கு அருகில் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளுக்கான செய்தி பிரிவு அலுவலகத்துக்கான அரை உள்ளது.

இந்நிலையில் இந்த அறையில் இருக்கம் ஏசியில் நேற்று காலை திடீர் மின்கசிவு ஏற்பட்டு, அதிலிருந்து புகை வெளியேற துவங்கியது.

அதை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் ஏசி தீப்பிடித்து எரிந்தது. இதில் ஏசியிலிருந்து பிளாஸ்டிக் பொருட்கள் உருகி அங்கு வைக்கப்பட்டிருந்த சில கோப்புகளில் விழ துவங்கியது. கோப்புகளுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தாள்கள் எரிய ஆரம்பித்து அறை முழுவதும் புகை பரவ ஆரம்பித்தது.

இதையடுத்து கருகிய வாடை வருவதை உணர்ந்த அதிகாரிகள் ஏசி எரிவதை அப்போது தான் பார்த்தனர். அவர்கள் உடனடியாக தீயணைப்புக்கு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைந்தனர். இதனால் முக்கிய கோப்புகள், மேஜை, நாற்காலி போன்றவற்றுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து தலைமை செயலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+