வாக்கிங் போனபோது கடத்தப்பட்ட மாநகராட்சி அதிகாரி - தப்பி வந்தார்
மதுரை: வாக்கிங் போன மதுரை மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அலுவலர் முருகேசன் திடீரென ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். பின்னர் அவர்களிடமிருந்து முருகேசன் தப்பி வந்தார்.
மதுரை மாநகராட்சியில் முதன்மை நகரமைப்பு அலுவலராக இருப்பவர் முருகேசன். இவர் நேற்று காலை வாக்கிங் போனார். ஆனால் திரும்பி வரவில்லை. இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு பத்தரை மணியளவில் அண்ணா நகர் காவல் நிலையம் வந்தார். இதையடுத்து போலீஸார் அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர்.
அதற்கு முருகேன் கூறுகையில், நான் வாக்கிங் சென்ற பகுதியில் டெம்போ டிராவலர் வேன் ஒன்று வந்தது. அந்த வேனில் இருந்த ஏழு பேர் என்னை துணியால் கண்ணைக் கட்டி வேனுக்குள் போட்டுக் கொண்டு பறந்தனர்.
அவர்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை. வேன் எங்கோ போய் நின்றது என்றும் தெரியவில்லை. என்னை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
எனது கையில் இருந்த ரூ. 2000 பணம், மோதிரம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு இறக்கி விட்டு விட்டனர். இறக்கி விடும்போது செலவுக்காக கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டு இப்படியே ஓடி விடு என்று கூறிச் சென்றனர்.
முருகேசன் கூறுவது உண்மையா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications