சென்னையில் பயங்கரம் - பிரபல ரவுடி பங்க் ராஜ் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: வட சென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவரான பங்க் ராஜ் என்பவர் இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை மகாகவி பாரதி நகரைச் சேர்ந்தவர் ராஜ் என்கிற பங்க் ராஜ். பிரபலமான ரவுடி. ஏராளமான, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்.
இன்று காலை மோட்டார் சைக்கிளில் அவர் திரு.வி.க.நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை ஒரு கும்பல் வழி மறித்தது. பின்னர் சரமாரியாக அவரை வெட்டித் தள்ளினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் பங்க் ராஜ். சம்பவ இடத்திலேயே பிணமானார். பின்னர் அந்தக் கும்பல் தப்பி ஓடி விட்டது.
தகவல் அறிந்ததும் திரு.வி.க. நகர் போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications