நோபல் பரிசுக்கு ஒபாமா லாயக்கா, இல்லையா?: பிரதமர் நழுவல்
Subscribe to Oneindia Tamil

கர்நாடக மாநிலம் ராய்ச்சூருக்கு வெள்ள நிலைமையைப் பார்வையிட இன்று பிரதமர் மன்மோகன் சிங் வந்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பேசுகையில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளதே என்று கேட்டபோது, இது நோபல் கமிட்டியைப் பொறுத்த விஷயம் என்றார் பிரதமர்.
ஒபாமா இந்த விருதுக்குத் தகுதியுடையவர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா என்று கேட்டபோது, இதை நோபல் கமிட்டிதான் முடிவு செய்ய வேண்டும். இதில் நான் கூறுவதற்கு ஏதும் இல்லை என்றார் பிரதமர்.
மேலும், நோபல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்காக ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்ட பிரதமர், மனம் நிறைந்த வாழ்த்துக்களை இந்திய மக்களின் சார்பாக அவருக்குத் தெரிவிப்பதாக கூறினார்.












Click it and Unblock the Notifications