நோபல்: வியப்பாக இருக்கிறது, பொறுப்பு அதிகரித்துள்ளது - ஒபாமா
யாரும் எதிர்பாராத வகையில் 2009ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சலசலப்புகளும் எழுந்துள்ளன.
இந்த நிலையில் நோபல் பரிசு குறித்து ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகை ரோஸ் கார்டனில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அமைதிக்காக பாடுபட்ட பல மாபெரும் தலைவர்கள் வரிசையில் என்னை நிறுத்தி வைத்துப் பார்ப்பது பொருத்தமற்றது என்று நான் உணர்கிறேன். இதை எனது சொந்த செயல்பாட்டுக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் நான் நினைக்கவில்லை. ஆனால் அமெரிக்கத் தலைமை அனைத்து நாடுகளும் வைத்துள்ள அன்புக்கான அங்கீகாரமாகவே கருதுகிறேன்.
சில குறிப்பிட்ட சாதனைகளை அங்கீகரிப்பதற்கு மட்டும் நோபல் பரிசு கொடுக்கப்படுவதில்லை என்பதை நான் அறிவேன். எனவேதான் இதை நான் ஏற்கிறேன். 21வது நூற்றாண்டின் பொதுவான சவால்களை உலக நாடுகள் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்ற அழைப்பாக இதை நான் கருதுகிறேன். எனது பொறுப்புகள் தற்போது அதிகரித்துள்ளன. முழுமையான அமைதி உலகில் நிலவ பாடுபட வேண்டும் என விரும்புகிறேன் என்றார் ஒபாமா.