For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாரதிராஜாவுக்காக பேசப் போய் வழக்கு-வைகோ நாளை கோர்ட்டில் ஆஜர்

Google Oneindia Tamil News

சென்னை: இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் முதல்வர் கருணாநிதிக்கு தொடர்பு இருப்பதாக கூறியதை அடுத்து தொடரப்பட்ட அவதூறு வழக்கில் மதிமுக பொது செயலாளர் வைகோ நாளை நீதிமன்றத்தில் ஆஜராகிறார்.

சென்னை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வைகோ, இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு தொடர்பு இருப்பதாக பேசினார்.

இதையடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வைகோ மீது கருணாநிதி சார்பில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை சமீபத்தில் விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் இம்மாதம் 12ம் தேதி வைகோ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் வழங்கினார்.

இதையடுத்து நாளை காலை 10.30 மணிக்கு வைகோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக இருக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X