திமுக கூட்டணி எம்பிக்கள் குழுவை புறக்கணித்த யாழ்ப்பாண தமிழர்கள்
திமுக- காங்கிரஸ் கூட்டணிக் குழுவினர் சென்ற இடமெல்லாம் ஓரளவே மக்கள் நின்றிருந்தனர். ஆனால், அவர்கள் கூட இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்களாம்.
இதுகுறித்து தமிழ் முதியவர் ஒருவர் கூறுகையில், 1987ம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் யாழ்ப்பாணத்திற்கு இந்திய தூதரக அதிகாரி ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரி கேப்டன் குப்தா ஆகியோர் வந்தனர்.
அப்போது யாழ்ப்பாணத்தில் மக்கள் அலைகடலென திரண்டிருந்தனர். ஒரு இன்ச் இடம் கூட இல்லாத அளழுக்கு தெல்லிபலாய் ஜங்ஷன் இடத்தில் மக்கள் வெள்ளம் என திரண்டிருந்தனர்.
இந்திய அதிகாரிகள் பல்வேறு வீடுகளுக்குச் சென்று மக்களுக்கு பிஸ்கட், குளிர்பானம் உள்ளிட்டவற்றை கொடுத்தனர். இதனால் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது நிலவிய சூழ்நிலை மிகவும் மகிழ்ச்சிரகமானதாக இருந்தது. ஆனால் அதனுடன் ஒப்பிடும்போது தமிழக குழுவினரின் வருகை ஒன்றுமே இல்லை என்றார்.
தமிழக குழுவினரின் வருகை தேவையற்றது, பயனற்றது என்று பலரும் கூறுகின்றனர். போர் உச்சத்தில் இருந்தபோது இவர்கள் வந்திருக்க வேண்டும், போரை நிறுத்த முயற்சித்திருக்க வேண்டும். பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க வேண்டும் என்றும் பலர் கோபம் கலந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
4ம் ஈழப் பேரில் யாழ்ப்பாணம் இடம் பெறவில்லை என்ற போதிலும் இங்குள்ள பெரும்பாலான மக்களின் உறவினர்கள் வன்னியில் இருந்தவர்கள், இப்போது பலர் அகதிகள் முகாம்களில் இருப்பவர்கள் என்பதால் யாழ் தமிழர்கள் இன்னும் கூட துயரத்திலிருந்து மீளாமல் உள்ளனராம்.
இந்த நிலையில் தமிழகத்திலிருந்து வந்த குழு அவர்களைப் பெரிதாக கவரவில்லை என்று கூறப்படுகிறது.













Click it and Unblock the Notifications