இந்தோனேசியாவில் 260 ஈழ தமிழர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: ஆஸ்திரேலியாவில் குடியேற முயன்ற 260 ஈழ தமிழ் அகதிகளை இந்தோனேசிய கடற்படை இன்று கைது செய்ததது.
இது குறித்து இந்தோனேசிய கடற்படையின் செய்தி தொடர்பாளர் இஸ்கன்டர் சிதோம்புல் கூறுகையில்,
ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையிலான சுன்டா ஜலசந்தியில் இலங்கையை சேர்ந்தவர்களை ஏற்றி வநத சரக்குக் கப்பலை மடக்கி பிடிக்கப்பட்டது.
அதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 260 இலங்கைத் தமிழ் அகதிகள் இருந்தனர். அவர்கள் ஜாவா தீவின் மேற்கு பகுதியான மீரக் துறைமுகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
அப்போது அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றது தெரிய வந்தது. அவர்கள் குடியேற்ற தடுப்பு பிரிவு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications