இலங்கையில் தமிழர்களை திட்டமிட்டு பிரித்து சிதைத்துள்ளனர் - திருமா.
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கைத் தமிழர் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
உள்நாட்டில் பிரிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும், புலம் பெயர்வாழ் தமிழர்களும் ஒன்று பட்டு கூட்டு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கினால் மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பும் உரிமையும் உறுதிப்படுத்தப்படும்.
நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கதறி அழுது கண்ணீர் மல்கி எங்களிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர்.
இலங்கை விஜயம் தொடர்பாகவும் அகதி முகாம்களில் மக்களின் உண்மை நிலை குறித்தும் விளக்கி தமிழக முதலமைச்சரின் மூலமாக இந்திய மத்திய அரசுக்க அறிக்கையினை சமர்ப்பிப்போம்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தனியான அறிக்கை ஒன்றையும் நான் சமர்ப்பிப்பேன் என்றார் திருமாவளவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தபயாவுடன் திமுக கூட்டணி குழு சந்திப்பு:
இந்த நிலையில், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவையும் திமுக- காங்கிரஸ் கூட்டணிக் குழுவினர் சந்தித்துப் பேசினர்.
போருக்குப் பிந்தைய நிலைமை, மறு குடியமர்த்தல் உள்ளிட்டவை குறித்து இரு தரப்பும் பேசினவாம்.
இந்த சந்திப்பின்போது இந்திய தூதர், துணைத் தூதர் ஆகியோரும் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications