நிர்வாகி பணம் பறிப்பு-தேமுதிக பிரமுகர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னிடமிருந்து கட்சி நிர்வாகி வாங்கிய ரூ. இரண்டரை லட்சம் பணத்தைத் திருப்பித் தராததால் வேதனை அடைந்த தேமுதிக பிரமுகர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை வேளச்சேரியில் வசித்து வந்தவர் தரணிக்குமார். இவர் தரமணி பகுதி தேமுதிக செயலாளராக இருந்தார். இந்த நிலையில் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்தக் கடிதத்தில், மாவட்ட நிர்வாகி ஒருவர் என்னிடம் ரூ. இரண்டரை லட்சம் பணம் வாங்கினார். எனது மனைவியின் நகைளை எல்லாம் அடகு வைத்து இதைக் கொடுத்தேன்.

இந்த நிலையில், எனது மனைவிக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதையடுத்து நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டேன். ஆனால் அவர் தர மறுத்து விட்டார்.

இதனால் எனது மனைவிக்கு என்னால் சிகிச்சை செய்ய முடியாமல் போனது. இந்த வேதனையால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தரணிக்குமார்.

இக்கடிதத்தை தேமுதிக தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அவர் அனுப்பியுள்ளார். இதனால் தேமுதிக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+