தூத்துக்குடியில் ஒரு 'அத்திப்பட்டி': கிராமத்தை காணவில்லை-கலெக்டரிடம் மனு!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பொதுமக்கள் சுமார் 100 பேர் திரண்டு ஒரு கிராமத்தை காணவில்லை என மாவட்ட கலெக்டரிடம் 'சிட்டிசன்' பட பாணியில் புகார் கொடுத்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே சங்கரப்பேரி என்ற கிராமத்தை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் பால் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் பொன் கருப்பசாமியின் தலைமையில் திரண்டு மாவட்ட கலெக்டர் பொறுப்பு வகித்து வரும் துரை. ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில்,
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சங்கரப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட புலிப்பாஞ்சன் கிராமத்தில் வறட்சி காரணமாக விவசாயத் தொழில் முடங்கி விட்டது.
இதனால் இந்த கிராமத்தில் வசித்தவர்கள் வெளியேறி அருகில் உள்ள தாளமுத்துநகர், முத்தம்மாள் காலனி போன்ற இடங்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் அந்த கிராமமே காலியாகி, மாவட்ட வரைபடத்தில் மட்டுமே உள்ளது.
இதையடுத்து, 247.10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கிராம நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் சட்டத்திற்கு புறம்பாக அபகரித்துள்ளனர். அதேபோல் 137.36 ஏக்கர் கொண்ட புலிப்பாஞ்சன் குளத்தையும், 102.11 ஏக்கர் கொண்ட நித்யகல்யாணி குளத்தையும் போலி ஆவணங்கள் மூலம் வாங்கியுள்ளனர்.
இந்த இரண்டு குளங்களும் காணாமல் போனதால் கால்நடைகளுக்கு நீரும், தீவனமும் இல்லாமல் நாங்கள் வாடி வருகிறோம்.
புலிப்பாஞ்சன் கிராமம், புலிப்பாஞ்சன் குளம், நித்யகல்யாணி குளம் ஆகியவற்றைக் கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்.
போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தூத்துக்குடி- எட்டையபுரம் சாலையில் சங்கரப்பேரி கிராம மக்கள் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications