இந்தோனேசியாவில் நிலநடுக்கம்-சுனாமி இல்லை
Subscribe to Oneindia Tamil
ஜகார்த்தா: இந்தோனேசியா அருகே கடலுக்கடியில் 6.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எதுவும் உண்டாகவில்லை.
இந்தோனேசியாவின் சுலவெசி தீவுக்கு அருகே கடல் பகுதியில் நேற்று மாலை சுமார் 6.38 மணிக்கு தீடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் லேசான குலுங்கின. மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கம் சுலவெசி தீவுக்கும், தெற்கு பிலிப்பைன்ஸ் பகுதிக்கும் நடுவில் சுமார் 11 கிமீ ஆழத்தில் மையம் கொண்டது.
இதனால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கடல் பகுதியில் ஏற்பட்ட போதும் 6.5 ரிக்டருக்கு குறைவாக இருந்ததால் சுனாமி எதுவும் வரவில்லை.
கடந்த மாதம் 30ம் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications