சீன பட்டாசுகளால் சிவகாசிக்கு பாதிப்பு!
சிவகாசியில் தான் நாட்டிலேயே அதிக அளவிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்டுக்கு இங்கு ரூ. 3,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தயாராகின்றன.
இது இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதம் ஆகும். இதில் 5 முதல் 10 சதவீத பட்டாசுகள் ஏற்றுமதி செய்ய�படுகின்றன.
இந் நிலையில் சீனாவிலிருந்து முறைகேடாக கொண்டு வரப்பட்டு விற்கப்படும் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இந்திய-சீன எல்லை மற்றும் நேபாளம், வங்காள தேச எல்லைகள் வழியாக நாட்டுக்குள் கொண்டு வரப்படும் இந்த சீன பட்டாசுகள் வட மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் தான் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்தக் பட்டாசுக் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.