வீரப்பன் நினைவு நாள்-கோவிலில் எருமை கன்று பலி

இந் நிலையில் கொளத்தூரை அடுத்த கருங்கல்லூர் அருகே உள்ள சந்தியூரில் வீரப்பனின் குலதெய்வமான முனியப்பன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு யாரோ எருமை கன்றுக்குட்டியை பலியிட்டுள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தமிழக போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று வீரப்பனின் 5ம் ஆண்டு நினைவு நாளை அவரது குடும்பத்தினர் அனுஷ்டித்தனர்.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மைசூர் சிறையில் உள்ள நிலையில் அவரது மகள்கள் வித்யாராணி, பிரபாவதி, வீரப்பனின் அண்ணன் மனைவி மாதம்மாள், மாதையனின் மருமகன் முனுசாமி மற்றும் மறுமலர்ச்சி வன்னியர் சங்க நிறுவனர் மணிவண்ணன், தலைவர் குபேந்திர குணபாலன், இளைஞரணித் தலைவர் செந்தில்குமார் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சமாதிக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய வித்யாராணி, பிரபாவதி ஆகியோர்,
மைசூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள எங்கள் தாயாரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு 3 மாதங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். எங்கள் தாயார் விடுதலை ஆவதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளோம் என்றனர்.
வீரப்பனின் மூத்த மகள் வித்யாராணி சென்னையில் பி.ஏ. வரலாறு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகள் பிரபாவதி சென்னையில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
முனியப்பன் கோவிலில் எருமை குட்டி பலி:
இந் நிலையில் வீரப்பனின் குலதெய்வமான முனியப்பன் கோவிலில் எருமை கன்றுக்குட்டியை பலியிட்டு அதன் தலையை முனியப்பன் கோவிலில் வைத்து வழிபட்டு சென்றுள்ளனர்.
இதைச் செய்தது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த கோவிலில் ஆடு, கோழி பலியிடுவதே வழக்கம். எருமை கன்றுக் குட்டியை பலியிட்டுள்ளது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications