For Daily Alerts
Just In
இந்திய நிறுவனங்களில் ஆளெடுப்பு விகிதம் கிடுகிடு உயர்வு
டெல்லி: இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் ஆளெடுப்பு நடவடிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த செப்டம்பர் மாதம் ஆளெடுப்பு விகிதம் 4.1 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.
தகவல் தொழில்நுட்பத் துறை, பிபிஓ, ரியல் எஸ்டேட் ஆகிய பிரிவுகள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளனவாம்.
இதுதொடர்பாக இணையதளம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில், அனைத்துப் பிரிவுகளிலுமே வேலைக்கான ஆளெடுப்பு சுறுசுறுப்படைந்துள்ளது.
குறிப்பாக ஐ.டி, பிபிஓ பிரிவுகளில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ஆளெடுப்பு கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது. மேலும் என்ட்ரி மற்றும் ஜூனியர் லெவல் வேலைகளுக்கு அதிகம் பேர் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்று அது கூறுகிறது.
Comments
இந்தியா bpo தகவல் தொழில்நுட்பம் பிபிஓ அதிகரிப்பு increase real estate ரியல் எஸ்டேட் hiring ஆளெடுப்பு
Story first published: Wednesday, October 21, 2009, 11:02 [IST]