For Daily Alerts
Just In
தூத்துக்குடி அருகே மழை வேண்டி உண்ணாவிரதம் இருந்த விவசாயி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மழை வேண்டி மாடசாமி என்ற விவசாயி உண்ணாவிரதம் இருந்த சம்பவம் புலரது புருவத்தை உயரவைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தைச் சேர்ந்த விவசாயி மாடசாமி (65). இவர் நேற்று அங்குள்ள கோயில் முன்பு மழை வேண்டி உண்ணாவிரதம் இருந்தார்.
இது குறித்து மாடசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தென்மேற்கு பருவ மழை சரியாக பெய்யவில்லை. அதே போன்று வடகிழக்கு பருவ மழையும் குறிப்பிட்ட காலத்தில் துவங்கவில்லை. இதனால் நாட்டில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விவாசயம் நல்லா இருந்தால் தான் நாடு நல்லா இருக்கும். எனவே விவசாயம் செழிக்க வேண்டி கடவுளிடம் மழை வேண்டி உண்ணாவிரதம் இருந்தேன் என்றார்.
இந்த விவசாயியின் உண்ணாவிரதம் அப்பகுதியினரின் கவனத்தை ஈர்த்தது.
Comments
Story first published: Wednesday, October 21, 2009, 14:40 [IST]