1.5 லட்சம் சத்துணவு ஊழியர்களுக்கு ஏடிஎம்மில் சம்பளம்- நவம்பர் முதல் அமல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1.5 லட்சம் சத்துணவு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஏ.டி.எம்மில் ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 33,000 பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என ஓன்றரை லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் முறையே ரூ.4500, 2500, 1500, 1000 என்ற விகிதத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 335 யூனியன், 148 நகராட்சி அலுவலங்களில் ஊதியம் பெற்று வருகின்றனர்.

ஊதியம் பெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று காத்து கிடக்கும் நிலை ஏற்படுவதுடன், சம்பந்தப்பட்ட யூனியன் அலுவலகத்திற்கும், சத்துணவு ஊழியர்கள் வேலை பார்க்கும் இடத்திற்கும் வெகுதூரம் இருக்கும் நிலையில் ஊதியம் பெருவதற்கு வரும் நாளில் விடுமுறை எடுக்கும் நிலை ஏற்படுகிறது.

இதையடுத்து தங்களுக்கு மற்ற அரசு ஊழியர்களை போல் வங்கி ஏடிஎம் மூலம் ஊதியம் வழங்க வேண்டுமேன சத்துணவு ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தமிழக முதல்வரின் உத்தரவுபடி சமுக நலத்துறை 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

சத்துணவு ஊழியர்களுக்கு ஏடிஎம் மூலம் ஊதியம் வழங்கிடும் வகையில் முதல்கட்டமாக சத்துணவு அமைப்பாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு தொடர வலியுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அடுத்த மாதத்திற்குள் வங்கியில் ஏடிஎம்முடன் கூடிய கணக்கு தொடங்கிய சத்துணவு அமைப்பாளர்கள் குறிதத பட்டியலை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+